Breaking News

லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல் வேட்பாளர்கள் மனு தாக்கல்!!!

நிர்வாகி
0
லால்பேட்டை,செப்,21
லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு (வடக்குத் தெரு) இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்தங்களின் வேட்புமனுவை லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரும்,தேர்தல் அதிகாரியுமான கஸ்நபர் அலி கானிடம் தாக்கல் செய்தனர்.

மனித நேய மக்கள் கட்சி சார்பில் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இவருடன் த.மு.முக வின் மாவட்ட துணைத் தலைவர் மெஹ்ராஜுத்தீன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமனுல்லாஹ், பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ்,துணைத் தலைவர் ஹாஜா மைதீன்,லால்பேட்டை நகர முஸ்லிம் ஜமாஅத் பொருளாலர் எஸ்.ஏ.அப்துல் அஹது, நகர காங்கிரஸ் தலைவர் ஹாஜி ஏ.எம்.அய்யுப்,த.மு.மு.க மாவட்ட வர்த்தக அணிச் செயளாலர் அப்துஸ் ஸமது,மருத்துவ சேவை அணி நூருல் அமீன்,செயளாலர் ஆஷிக்,எஸ்.எஸ்.இமாம் அலி,உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

தேசிய லீக் சார்பில் போட்டியிடும் ஏ.ஆர்.சிராஜுத்தீன் வேட்புமனு தாக்கலின் போது அவருடன் ஓ.பி.முஹம்மது அசன்,ஏ.ஆர்.நவ்வர் ஹுஸைன்.ஏ.ஆர்.சலஹுத்தீன்,டி.ஜெ.அஹமதுல்லாஹ்,டி,ஜெ.அமீனுல் ஹக்,முஹம்மது புஹாரி,சபீர் அஹமது,டி.ஜெ.அஹமது,மைதீன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Tags: இடைத்தேர்தல் லால்பேட்டை

Share this