Breaking News

தேமுதிகவில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: விஜயகாந்த்

நிர்வாகி
0


சென்னை, செப்.14- கட்சி ஆரம்பித்த 5 ஆண்டுகளில் 50 லட்டத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேமுதிகவில் சேர்ந்துள்ளனர் என்று அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க.வின் 5-ம் ஆண்டு துவக்கவிழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
2011-ல் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியில் தினமும் புதிய உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே அதற்குள் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் கூறமுடியாது.
இன்றைய சூழ்நிலையில் தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது அவசியமான ஒன்று. இது குறித்து ராகுல் காந்தி கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து என்றார் விஜயகாந்த்.

Tags: தே.மு.தி.க.

Share this