Breaking News

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 1200 பேர் கைது

நிர்வாகி
0
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 1200 பேர் கைது
மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.அதேபோல் கட லூர் மாவட்டம் சிதம்பரம் லால் கான் தெரு டாஸ்மாக் கடை அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் டாஸ்மாக் கடை களை மூட வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத் தினர்.

போராட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட பொரு ளாளர் அமீர்பாஷா தலைமை தாங்கினார்.மனித நேய மக்கள் கட்சி நகர பொருளாளர் ஜமால் உசேன் பேசினார்.நகர செய லாளர் அல்தாப் உசேன் வர வேற்று பேசினார்.போராட்டத்தில் ஜாகீர் உசேன், லியாகத் அலி, அப்துல் ரகீம், ஹபீபூர் ரகு மான், ஹசன் அலி, முகமது ஷரீப், நாசர், இம்ரான்கான், நகர தலைவர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைது

போராட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், மாவட்ட துணை செய லாளர் மன்சூர், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் மகபூப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.போராட் டத்தில் 250 பேர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் அவர்களை கைது செய்தனர்.கைது செய் யப்பட்டவர்கள் மாலை யில் விடுதலை செய்யப் பட் டனர்.

அதேபோல் காட்டுமன்னார் கோவிலில் மனிதநேய மக்கள் கட்சியினர் டாஸ் மாக்கடைகளை மூட வேண்டும் என்று சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கடை முன்பு மறியல் செய் தனர்.போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மெகராஜுதீன் தலைமை தாங்கினார்.த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் அராபத், மருத்துவர்அணி அமீன், லால்பேட்டை நகர செயலாளர் அïப், பாஷா, ஆசிக் உள்பட 900 பேர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.அவர்களை காட்டுமன்னார் கோவில் போலீசார் கைது செய்தனர்.

Tags: போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி

Share this