Breaking News

லால்பேட்டை வார சந்தையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவிலில் தீ தொண்டு நாள் விழாவையொட்டி லால்பேட்டை வார சந்தையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செய்முறை விளக் கம் செய்து காண்பிக்கப் பட்டது.


காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை சார்பில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் விழா கொண்டாடப் பட்டு வருகிறது. அதையொட்டி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீ விபத்து முதலுதவி மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் செய்முறை விளக் கங்கள் செய்து காண்பிக் கப்பட்டு வருகிறது. அந்த வகையில் லால்பேட்டை வார சந்தையில் தீ விபத்து முதலுதவி செய்வது பற்றி நிலைய தீயணைப்பு அலுவலர் கிருஷ் ணமூர்த்தி தலைமையில் செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this