Breaking News

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்

நிர்வாகி
0
1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுதந்திர ஒரு பங்காக சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும் , மதுவிலக்குகொள்கையாய் வைத்திருந்த தந்தை பெரியார், அண்ணா வழியையும், கொள்கையையும் பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மது ஆறாக தமிழகத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. மதுவின் வருமானத்தில் தான் ஆட்சியை நடக்கிறது என்று கூறும் கேவலமான சூழ்நிலையை மனித நேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன், மாநிலத்தில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் 46 சதவிதம் மக்கள் மது நோயாளிகள் ஆகிவிட்ட நிலையில், உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சுயமரியாதையை பறிக்கு நோக்கத்தில், மக்களை மது நோயாளிகளாக ஆக்கும் நோக்கத்தில் கள் இறக்க அனுமதி கோருவதையும் வன்மையாக கண்டித்தும்.

கோவையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூராக உள்ள உக்கடம், பொருமாள் கோவில் வீதி, செல்வபுரம் தெற்கு மற்றும் போத்துனூர் ஆட்டுதொட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான், தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது கண்டன உரை ஆற்றினார், சமத்துவ முன்னணி நிர்வாகி தோழர் கார்க்கி , மாவட்ட தமுமுக தலைவர் அப்துல் பஷிர், மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர் டிஎம்எஸ் அப்பபாஸ், மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட பொருளாளர் கபிர், ஜபார், கவிஞர் ஹக், ஜபார்சாதிக், இளைஞர் அபு, நிஷார், காஜா, மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள், தமுமுக, மமக, கிளை,நகரம்.மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

 நன்றி :கோவை  தங்கப்பா

Share this