Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

நிர்வாகி
0
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 26-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

வரைவு வாக்காளர் பட்டியல்

2010-ம் ஆண்டுக்கான சுருக்குமுறை திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் கடந்த 16-ந்தேதி வரை பெறப்பட்டது.

கால அவகாசம்

இப்போது இந்திய தேர்தல் ஆணையம் மேற்காணும் பெயர்சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்களை பெறுவதற்கான கடைசி தேதியை வருகிற 26-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பெயர் விடுபட்ட நபர்கள் வருகிற 26-ந்தேதிக்குள் படிவம் 6-ஐ புதியதாக பெயர் சேர்க்கவும், படிவம் 7-ஐ பெயர் நீக்குவதற்கும், படிவம் 8 மற்றும் 8 ஏ-ஐ வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களபணியாளர்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Tags: அறிவிப்பு

Share this