Breaking News

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

நிர்வாகி
0
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.


ஆலோசனை கூட்டம்

தமிழக அனைத்து சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜமாஅத்துல் சபையின் தமிழ்நாடு தலைவர் எ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பொது செயலாளர் பக்ருதீன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா, துணை தலைவர் ஜான் முஹம்மது, இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணைதலைவர் முஹமது முனிர், தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் எஸ்.எம்.இதயத்துல்லா, மஸ்ஜித்களின் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பரூக், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தலைவர் கே.எ.மன்சூர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், ஜம்மியத் துல் உலாமாயே இந்த் பொது செயலாளர் மன்சூர் ஹஜ்ரத், தலைவர் சையத் முஹமது ஷெரிப், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் பொது செயலாளர் தர்வேஷ் ரஷாதி, ஆல் இந்தியா பர்சனல் லா போர்டு முகமது வலியுல்லாஹ் ரஷாதி, தாருல் இஸ்லாம் சபை தலைவர் கே.எம்.இலியாஸ் ரியாஜி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொது செயலாளர் எஸ்.எம்.அப்துல் ரஹீம் பட்டேல், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு தலைமை காஜி முப்தி சலாஹுத்தீன் அய்ïப் ஆகியோர் பங்கேற்றனர்.

கட்டுப்பாடு வேண்டும்

இந்த ஆலோசனை கூட்டத்தில், பாபர் மசூதி வழக்கில் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கே உரிய கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். வழக்கு சாதகமாக இருந்தால் தனித்தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

மாறாக மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதோ பாதகமாக இருந்தால் துவண்டுவிடவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஆக்ரோஷமான எச்செயல்களிலும் ஈடுபடுவதோ கூடாது.

மேலும், தீர்ப்பை தவறாக பயன்படுத்தி மசூதிகளுக்கு இடைïறு செய்யும் விதத்தில் யாராவது ஈடுபட்டால் வேடிக்கை பார்க்காமல் அத்தகைய சமூக விரோத தீய சக்திகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Share this