Breaking News

லால்பேட்டையில் 28-ல் மின் வாரிய நுகர்வோர் குறைகேட்பு

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
சிதம்பரம் கோட்ட மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் சிதம்பரத்தை அடுத்த லால்பேட்டை பிரிவு அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் ஜூன் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

கடலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.எம்.ரவிராம் தலைமை வகிக்கிறார். மேற்கண்ட கூட்டத்தில் சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மின் நுகர்வோர் பங்கேற்று பயனடையுமாறு செயற்பொறியாளர் ரா.செல்வசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: குறை கேட்பு நுகர்வோர்

Share this