Breaking News

லால்பேட்டையில் தியாகத் திருநாள் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!!

நிர்வாகி
0
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் : ஆகஸ்ட் 12,

லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 7.15 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா முன்னாள் தலைவர் ஏ.இ.எம்.அப்துல்ரஹ்மான் ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மாவட்ட அரசு காஜியுமான மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹழ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.


காலை 6.30 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.


தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல் வாழ்வுக்காகவும், நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர். மேலும் ஊரின் செழிப்பான, சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது. பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.








Tags: லால்பேட்டை செய்திகள்

Share this