அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளராக லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தேர்வு!
நிர்வாகி
0
அபுதாபி அய்மான் சங்கத்தின் 449 -வது செயற்குழுக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு 03/08/2019 சனிக்கிழமை மாலை பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகளை விரிவு படுத்துவது,அய்மான் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி மற்றும் அய்மான் பைத்துல் மால் செயல்பாடுகளை பரப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
💐மாற்றியமைக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழு:
💢தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன்
💢துணைத் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன்
💢பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி
💢துணைப் பொதுச் செயலாளர் நா.அ. பூந்தை.ஹாஜா மைதீன்
💢பொருளாளர் லால்பேட்டை ஏ.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி
💢துணைப் பொருளாளர் ஆடுதுறை எம்.அப்துல் காதர்
💢மார்க்கத் துறை செயலாளர் காயல்பட்டிணம் மெளலவி எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கி மஹ்லரி
💢ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் பார்த்திபனூர் எம்.நிஜாம் மைதீன்
💢சமூக நலத்துறை செயலாளர் மன்னார்குடி ஏ.ஃபிர்தோஸ் பாஷா
💢மக்கள் தொடர்புச் செயலாளர் பசுபதிகோவில் ஏ.சாதிக் பாட்ஷா
💢நிர்வாகச் செயலாளர் கீழக்கரை. ஹுஸைன் அல்லாஹ் பக்ஸ்
💢விழாக் குழு செயலாளர் காயல் லெப்பைத் தம்பி
💢தணிக்கையாளர் மதுக்கூர்.அப்துல்லாஹ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஏற்புரையாற்றினார்.
துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் நன்றி கூற, அய்மான் செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
Tags: சமுதாய செய்திகள்