Breaking News

கொள்ளுமேடு தமுமுக தொல். திருமாவளவன் சந்தித்து மனு அளிப்பு ..

நிர்வாகி
0
மாண்புமிகு சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களை இன்று சந்தித்து கொள்ளுமேடு ஊராட்சியில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும், கொள்ளுமேட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமணை அமைக்கக் கோரியும் கொள்ளுமேடு தமுமுக சார்பில் மனு அளிக்கப்பட்டன.

தமுமுகவின் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எச். அப்துல் சமது தலைமையில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் சபீகுர் ரஹ்மான், மாவட்ட ஊடகப் பிரிவு பொருளாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட கொள்ளுமேடு தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் பிரமுகர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான் உடனிருந்தார்.

Tags: செய்திகள்

Share this