Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகி
0

லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பொதுக்குழு கூட்டம் தேரா லண்டன் ஹோட்டலில் 18-10-2019 நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


தொடக்கமாக மெளலவி A. R. ரியாஜில்லாஹ் இறைவசனம் ஓத, கூட்டத்தின் தலைமை பொறுப்பை மூத்த நிர்வாகி முஹம்மது பஷீர் அவர்கள் ஏற்குமாறு , ஜமாத்தின் செயலாளர் V. A.குத்ரதுல்லாஹ் முன்மொழிந்தார், ஜமாத்தின் தலைவர் S. M. முஹம்மது ஆஷிக் அவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று அமர்ந்தார், நிகழ்கால ஊரின் சூழ்நிலைகளையும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துதல் பற்றியும் B. ரஹ்மத்துலாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.


வெளிநாடு வாழ் லால்பேட்டை சொந்தங்களின் முயற்சியால் தொடங்கப்படவுள்ள லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகளும் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டது, உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பொருளாளர் A. J. முஹம்மது மைதீன், துணை பொருளாளர் R.P.அப்துல் பத்தாஹ் மற்றும் மெளலவி A. R. ரியாஜில்லாஹ் ஆகிய நிர்வாகிகளால் விவரிக்கபட்டன.


ஜமாத்தின் வீரிய செயல்பாடுகளுக்கான ஆலோசனைகளும் கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளபட்டது.


இறுதியாக புனித ஹஜ் யாத்திரை நிறைவேற்றிய உறுப்பினர்களுக்குக் பொன்னாடை போற்றி நிர்வாகிகளால் கௌரவம் செய்யப்பட்டது.


இங்ஙனம்
லால்பேட்டை துபாய் ஜமாத்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this