லால்பேட்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மதியம் 4.30.மணியளவில் லால்பேட்டை சிதம்பரம் மெயின்ரோடு ஜித்தா டிராவல்ஸ் அருகில் ராகுல்காந்தி அவர்களின் 50-வது பிறந்தநாள் "விவசாயி பாதுகாப்பு நாள்"ஆக கொண்டாடப் பட்டது.
மாவட்டதலைவர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், பி.பி.கே.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டதுணைத்தலைவர் நஜீர்அஹமது வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மனிதநேயப் பண்பாளர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் விவசாயிகளுக்கு விதைநெல்,மரக்கன்று மற்றும் பிரட் வழங்கினார். விழாவில் ஊடகப்பிரிவு சிவசக்திராஜா, சிதம்பரம் குமரவேல்,வட்டாரத் தலைவர் பாபுராஜன்,சங்கர் ,மாவட்டசெயலாளர் சானுபாய் எள்ளேரிபன்னீர்,மானியம் ஆடூர் முருகன்,கொ.மலை.சாரங்கன் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை