Breaking News

லால்பேட்டை தமுமுக மமக சார்பில இந்தியன் வங்கி முற்றுகை

நிர்வாகி
0

கடந்த சனிக்கிழமை லால்பேட்டையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளரை தாக்கிய துணை மேலாளர் சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (08/06/2020) காலை 11 மணி அளவில் லால்பேட்டை தமுமுக மமக சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு வெற்றி பெற வைத்தனர்.

முற்றுகை போராட்டதினை அறிந்து இந்தியன் வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து பேச்சுவார்த்தையின் மூலம் நடவடிக்கை மற்றும் கோரிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதி அளித்தனர். ◼️ வாடிக்கையாளரை தாக்கிய துணை மேலாளர் சீதாராமன் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரினார். ◼️ துணை மேலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை எற்றுக்கொண்டனர். ◼️ வங்கியின் பொது மேலாளராக இருக்கும் வட மாநிலத்தவரை மொழி புரிதல் காரணம் கொண்டு தமிழ் மொழி அறிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் ஏற்று கொண்டனர். ◼️ கடந்த கால சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து வரும் காலங்களில் வாடிக்கைளார்கள் அனைவர்களையும் கண்ணியமான முறையில் இந்தியன் வங்கி நடத்தும் என்றும் வாக்குறுதியும் அளித்தனர். பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவு ஏற்பட்டதினை தொடர்ந்து அனைவர்களும் கலைந்து சென்றனர்.

Tags: லால்பேட்டை

Share this