Breaking News

இனிதே நடைபெற்ற லால்பேட்டை சுகாதார மையம் திறப்பு விழா

நிர்வாகி
0
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-07-2020 வெள்ளி கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்பு அனைத்திற்கும் தீர்வை தரும் அருள்மறையாம் இறைமறையை ஆலீம் பெருந்தகைகள் மருத்துவமனை வளாகத்துக்கு வருகை தந்து ஓதி பின்பு நமது ஜாமிஆ முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்கள் மருத்துவமனை வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் பயனளிக்க வேண்டி ஏக இறைவனிடம் சிறப்பு துஆ செய்தார்கள்.
அதனை தொடர்ந்து அஸர் தொழுகைக்கு பின் #LALPET_HEALTHCARE_CENTER - லால்பேட்டை சுகாதார மையத்தினை, நமது ஜாமிஆ முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லான மவ்லவி அல் ஹாபிழ் காரி ஏ. நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் திறந்து வைத்து துஆ செய்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!
லால்பேட்டை மண்ணின் மைந்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்து துஆ செய்த ஜாமிஆவின் துணை முதல்வர், அனைத்து ஆசிரிய பெருந்தகைகள் மற்றும் ஜாமிஆ நிர்வாக சபையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து மஹல்லாஹ் பள்ளிவாசல் முத்தவல்லிகள், நிர்வாகிகள் இறைமறையை மருத்துவமனை வளாகத்தில் ஓதுவதற்க்கு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து தந்த லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளுக்கும், இறைமறையை அழகுர ஓதிய அனைத்து ஆலீம் பெருதகைகளுக்கும், லால்பேட்டை நகரத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்க்களுக்கும், லால்பேட்டை பொது மக்கள் அனைவருக்கும் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் جزاكم الله خيرا كثيرا அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக! என்ற துஆவினை அல்லாஹ்விடத்தில் முன்னிருத்திருகிறோம்!!


Tags: லால்பேட்டை

Share this