Breaking News

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

நிர்வாகி
0

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் 23.10.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது.

இந்த ரத்ததான முகாம் துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரத்தத்தின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. இந்த சேவையில் பங்கு கொண்டு தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்ய முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர்

தேவிபட்டினம் நிஜாம் : 050 352 5305

முதுவை ஹிதாயத் : 050 51 96 433

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

ரத்ததானம் செய்ய வருபவர்கள்

கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு வர வேண்டும்.

வெளிநாடு சென்று வந்த ஒரு மாதம் ஆகியிருக்க வேண்டும்.

விசிட் விசாவில் இருப்பவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதியில்லை.

Tags: உலக செய்திகள்

Share this