Breaking News

கத்தாரில் நடைபெற்ற காந்திஜெயந்தி,கல்விதந்தை காமராஜர் நினைவு நிகழ்வு

நிர்வாகி
0

கத்தார் அல்கோர் செட்டிநாடு உணவகத்தில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் ஹமத் இரத்ததான மைய குழுவினரின் உதவியோடு மிக சிறப்பாக நடைபெற்றது ,

இந்நிகழ்வு ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் சமீர் அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது

மேலும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் பொருளாளர் வலியுல்லாஹ் அவர்கள் அனைவரையும் வரவேற்று, துணைதலைவர் இப்ராஹிம் அவர்கள், துணைசெயலாளர் குமார்அவர்கள் , நிர்வாக ஆலோசகர்கள் ஜெகபர் சாதிக் அவர்கள், லுத்பி அவர்கள்,தமிழ்மகன் பைசல் அவர்கள் ஆமினா பர்ஷானா அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புடன் செயல் படுத்தினர்.

இரத்ததான நிகழ்வை ICBF இணை செயலாளர் சந்தோஷ் குமார் அவர்களும் , செட்டிநாடு உணவக உரிமையாளர் நாதன் அவர்களும் ,பெரியார் மணிகன்டன் அவர்களும்,சுலைமான் தஸ்தகீர் அவர்களும், மற்றும் அல்கோர் தன்னார்வலர்கள் தமிழ் செல்வன் அவர்கள்,வினோத் அவர்கள்,பாண்டியன் ஆகியோர்களும் துவக்கிவைத்தனர். இரத்ததான நன்கொடையாளர்களுக்கு மதியம் உணவு பரிமாரப்பட்டது ஹமத் இரத்ததான மைய குழுவினர்கள் அனைவரும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து பணியை சிறப்புடன் செயல்படுத்தினர் . ஹமத் இரத்ததான குழுவினர் இரத்தம் போதும் என்றளவுக்கு இரத்ததான நன்கொடையாளர்கள் பங்குகொண்டது குறிப்பிட தக்கது .

இதில் இந்திய தூதரகம், கீழ் இயங்கும் ICBF நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் இந்தியர்களுக்கான காப்பீடு திட்டத்தினை அல்கோர் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு இந்த காப்பீடு திட்டத்தில் சிலரை இணைக்கப்பட்டு ICBF சந்தோஷ் குமார் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

Tags: உலக செய்திகள்

Share this