Breaking News

சிதம்பரத்தில் அமலாக்கதுறையே ! ஆர்.எஸ்.எஸின் கைபாவயாக செயல்படாதே! என்ற தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

நிர்வாகி
0

மத்திய அரசு தனது அரசியல் தோல்விகளை மறைப்பதற்காக மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளுக்கு எதிராக தனது பழி வாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவாசாய மசோதா, ஜனவரியில் கொண்டு வரவுள்ள NRC, NPR சட்டங்களை எதிர்பதின் காரணமாக பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள் நிர்வாகிகளின் வீடுகள் மத்திய அரசின் கை பாவயாக செயல்ப்பட்டு கொண்டு இருக்க கூடிய அமலாக்கத்துறை (ED) சோதனை என்ற பெயரில் இதனை கண்டிக்கும் விதமாகவும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் போஸ்ட் ஆபீஸ் அருகே 11.12.2020 மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A.பயாஸ் அஹமது மன்பஈ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஹமீத் புரோஸ் மாவட்ட துணைத்தலைவர் ஷர்புதீன் ஷரீப் தமுமுக மாவட்ட செயலாளர் முகமது அஸ்லம் ஆகியோர் மத்திய அரசின் இந்த மக்கள் இயக்கத்திற்க்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் பாப்புலர் ஃப்ரண்ட் கடலூர் மாவட்ட செயலாளர் அன்வர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாவட்ட துணை செயலாளர் ரபீக் சிதம்பரம் ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா@ஜியாவுதீன் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Tags: செய்திகள்

Share this