Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா- கடலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற 72வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி

நிர்வாகி
0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-கடலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்திய தேசத்தின் 72வது குடியரசு தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் A. பயாஸ் அஹமது மன்பஈ அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசு தின சிறப்புரை நிகழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் -ன் லால்பேட்டை ஏரியா தலைவர் முபாரக் தலைமை தாங்கினார் SDPI கட்சி கடலூர் மாவட்ட துணை தலைவர் I.சர்புதீன் சரீப் சிறப்புரை வழங்கினார் SDPI மாவட்ட செயலாளர் S.மக்பூல் அஹமது ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயலாளர் தாய்யுப் பையாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சகோதரர் நிசார் அஹமது தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் - ன் செயல் வீரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this