Breaking News

கடலூர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை புகார் மனு

நிர்வாகி
0

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து நமது உயிரினும் மேலான முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றி மனம் புண்படும் படியாக பேசிய கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று (4-2-2021 ) காலை 11 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் கடலூர் பண்ருட்டி வட்டாரம் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் சிதம்பரம் வட்டாரம் தலைவர், செயலாளர், பொருளாளர் நெய்வேலி குறிஞ்சிப்பாடி வட்டாரம் தலைவர், செயலாளர் விருத்தாசலம் வட்டார தலைவர் மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

Tags: சமுதாய செய்திகள்

Share this