Breaking News

லால்பேட்டையில் கல்யாணராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிர்வாகி
0

லால்பேட்டயில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் உலக மக்களின் உயிரினிய தலைவர் மனிதருள் புனிதர் எப்பெருமானார் நபிகள் நாயகம் ரசூல் ஸல் அவர்கள் குறித்து அவதூறு பேசி மதநல்லிணக்க பூமியான தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த துடிக்கும் கல்யாணி ராமன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று 08.02.2021 மாலை 5.00 மணியளவில் கைகாட்டியில் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் கே .ஏ .அமானுல்லா, லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் எஸ் .ஏ .அப்துல் அஹது முன்னிலை வகித்தனர் . மௌலானா ஏ .மாசுமுல்லாஹ் மன்பஈ அவர்கள் இறை வசனம் ஓதினார்

மௌலானா முஹம்மது அலி மன்பஈ , மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, மௌலானா எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ, ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமெழுப்பினர்.,

மௌலானா அப்துல் மஜித் மன்பஈ அவர்கள் துஆ உடன் இனிதே ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது .

Tags: லால்பேட்டை

Share this