Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உடல் நலம்பெற வேண்டி துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

நிர்வாகி
0

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் உடல் நலம்பெற வேண்டி துஆ மஜ்லிஸ் 9/4/2021 வெள்ளி கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.

நகர தலைவர் எஸ். எம். அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.

மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், நகர செயலாளர் எம். ஹெச். முஹம்மது ஆசிப், நகர துணை தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மவ்லானா தவ்பீக் யாசின் ஓதினார். மவ்லானா ஹாமீம் பைஜி தலைவர் பேராசிரியர் என்றும் போல பணிகளை மேற்கொள்ள உடல் நலம் பெற வேண்டி துஆ செய்தார்.

நகர பொருளாளர் முஹம்மது தைய்யுப் முஹிப்பி நன்றி கூறினார்.

நகர நிர்வாகிகள் எஸ்.எம்.ஹாமீது, கே.யூ.சபியுல்லா, ஏ.உபைதுர் ரஹ்மான், எம்.ஹெச்.முஹிப்புல்லா, மௌலானா அமீனுல் ஹுஸைன், நாஜியுல்லா, மௌலானா பஷீர், எம்.ஹெச்.நாசர், ஹஜ்ஜி முஹம்மத், யூத் லீக் மாவட்ட பொருளாளர் முபாரக், யூத் லீக் தலைவர் மஹபூப் அலி ரப்பானி, அய்யூப் கான், சாதுல்லா, பாருக், ஹாஜா, இம்தாதுல்லா, முஸாஹிர், ஹாசிம் உள்ளிட்டோர் துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this