Breaking News

லால்பேட்டையில் இஸ்ரேலிய காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

லால்பேட்டை நகரில் பாலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலிய காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு முடிவின் படி பாலஸ்தீன மண்ணின் மீதும், மக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேல் உடனான இராஜாங்க தொடர்பை இந்திய அரசு உடனடியாக துண்டிக்க கோரியும் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 13.05.2021 வியாழக் கிழமை காலை 11 மணியளவில் லால்பேட்டை புது பஜார் அலுவலகம் அருகில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் எஸ். எம். அப்துல் வாஜிது தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி இஸ்ரேலை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

நகர செயலாளர் எம். எச். ஆசிப், மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் அமானுல்லா நன்றி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: லால்பேட்டை

Share this