Breaking News

துபாய் ஈமான் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்

நிர்வாகி
0

தியாகத் திருநாள் விடுமுறையையொட்டி துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் துபாயில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

ஈமான் தலைவர் ஹபிபுல்லா கான் வழிகாட்டுதலில் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் இரத்ததான முகாம் பகுதியில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டிவிஎஸ் ஹைதர் அலி ஆர் ஜே சாரா எழுத்தாளர் குழும நிறுவனர் ஆசிப் மீரான் பிலால் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் கவ்ஸர் நிஜாம் அலி சமீர் சித்திக் பாஷா உஸ்மான் ஆயப்பாடி முஜீப் நஜிம் ஜலால் மற்றும் ஈமான் உறுப்பினர்கள் செய்திருந்தனர்

Tags: உலக செய்திகள்

Share this