லால்பேட்டை முதுப் பெரும் ஆலிம்களை கண்ணியம் செய்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை
நிர்வாகி
0
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதுப் பெரும் ஆலிம்களை கண்ணியம் செய்வோம் நிகழ்வு கடந்த மாதம் மதுரையில் நடைப்பெற்றது அப்போது லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்ந்த மவ்லானா மவ்லவி அப்துல் மாலிக் மன்பயீ ஹள்ரத் அவர்களுக்கும்.
11- 9- 2021 அன்று கும்பகோணத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெற்ற நிகழ்வில் நமது லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையை சார்ந்த மவ்லானா மவ்லவி S.S ஜியாவுதீன் மிஸ்பாஹி,பாஜில் மன்பயீ ஹள்ரத், மவ்லானா மவ்லவி A.M முஹம்மது அன்சாரி மன்பயீ ஹள்ரத், ஆகியோருக்கும் மேலும் இவர்களுடன் தமிழகம் முழுவதும் பரவலாக 67 மூத்த ஆலிம்களை கண்ணியப்படுத்தி வாழ்த்து கேடயமும் ஒரு இலட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இந்த மூத்த ஆலிம் பெருமக்களுக்கு லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
அவர்களை கண்ணியப்படுத்திய தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
Tags: லால்பேட்டை