ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் மறைவு!
நிர்வாகி
0
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய வழிகாட்டு குழு உறுப்பினரும், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியருமான ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சற்று முன் இறை அழைப்பை ஏற்றார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மறைந்த மார்க்க மேதை மெளலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி பேட்டை. அவர்கள் தன்னுடைய மார்க்கப் பணியை ஆற்றுவதற்கு தேர்ந்தெடுத்த பேரூர் லால்பேட்டை.
லால்பேட்டை மக்களோடும் மண்ணோடும் ஒன்றிணைந்து உறவாடி இரண்டறக் கலந்தவர் அவரின் ஆற்றல் மிகு கல்வி ஞானம், ஹதீஸ் கலையில் அவருக்கு இருந்த தூரநோக்கு ஆய்வு இவைகள் இறைவன் அவருக்குக் அளித்த பேரருள்.
பிதாமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பிறந்த மண்ணில் வாழ்ந்து,வளர்ந்தததால் இயற்கையாகவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மீதும்,அதன் தலைவர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்டிருந்தவர்.
மிகச் சிறந்த கல்வியை மானை இழந்து தவிக்கும் தமிழ் சமூகத்திற்கு மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது..
Tags: வஃபாத் செய்திகள்