Breaking News

லால்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய பாபரி பள்ளி மீட்புப் போராட்டம் ..!

நிர்வாகி
0
போராட்டம் ஓயாது! பாபர் பள்ளி மீண்டும் அதே இடத்தில் கட்டப்படும்வரை என்ற முழக்கத்துடன் இந்திய ஒன்றியம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாபரி பள்ளி மீட்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக லால்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 6.12.2021 நடைபெற்றது. காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் அஹமதுல்லா தலைமையிலும் தொகுதி செயற்குழு உறுப்பினர் ரிஜ்வான் வரவேற்புரையாற்றினார். மேலும் கடலூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன் சரீப், மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா மாவட்ட பொருளாளர் மக்பூல் அஹமது, மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா, தொகுதி செயலாளர் ஜபருல்லா, தொகுதி செயற்குழு உறுப்பினர் நிஜார் அஹமது, நகர தலைவர்கள் நஜ்முதீன், ஃபைசல், முஜிபுர்ரஹ்மான்
மேலும் இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா அவர்களும், இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஹிம் ஹசனி அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டன குரல்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெண்கள் உட்பட எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி, நகரம், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இறுதியாக லால்பேட்டை நகர துணை தலைவர் நூருல் அமீன் நன்றியுரையாற்றினார்.

Tags: லால்பேட்டை

Share this