Breaking News

காட்டுமன்னார்குடியில் சிம்னி விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

நிர்வாகி
0



மக்களை வதைக்கும் தமிழக அரசின் அநியாய மின் கட்டண உயர்வு முடிவை கைவிட வலியுறுத்தியும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்டம் #காட்டுமன்னார்குடியில் இன்று (29.07.2022) சிம்னி விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி தலைவர் அஹமதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணை தலைவர் சர்புதீன் ஷரீப் மற்றும் PFI மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது மன்பயீ ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.


ஆர்ப்பாட்டத்தில்  100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: செய்திகள்

Share this