Breaking News

திருச்சியில் நடைபெற்ற தமுமுக- மாநில பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0

 

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து முதல் கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது . இதற்காக எம்.எச் . ஜீப்ரி காசிம் . பி.எம்.ஆர் சம்சுதீன் மற்றும் தாஹிர் பாஷா ஆகியோரை கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது . 36 தேர்தல் ஆணையாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள் . தேர்தலின் இறுதி கட்டமாக தமுமுக தலைவர் , பொதுச் செயலளார் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நவம்பர் 5 ம் தேதி திருச்சி சமயபுரம் எமரால்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமை பொதுக் குழுவில் தேர்தல் நடைபெற்றது . 


இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹில்லாஹ் MLA தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி   தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராக பொருளாளர் : பொறியாளர் என் ஷஃபியுல்லாஹ் கான் 


மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக ப.அப்துல் சமது MLA

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளராக கோவை இ.உமர் ஆகியோர்  பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.





Tags: செய்திகள்

Share this