டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் 'பாசிச எதிர்ப்பு தினம்' லால்பேட்டை யில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்!
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
லால்பேட்டை யில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக SDPI தமிழ்நாடு மாநில செயலாளர் ரத்தினம் அவர்கள் கண்டன உரையாற்றினர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Tags: லால்பேட்டை