Breaking News

திருச்சியில் நடைபெற்ற மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு ..!

நிர்வாகி
1

 தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. 


பல ஜூம்ஆ மேடைகளில் இது குறித்த அறிவிப்பு செய்யப்பட்டு, பல ஜமாஅத் நிர்வாகம் தங்களது மஹல்லா பிள்ளைகளை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 


தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் துறைசார்ந்த உயர்கல்வி நெறியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சியளித்தனர். (அனைவரும் முனைவர் பட்ட (Ph.D)ஆய்வாளர்கள்)  


இனி வரும் காலங்களில் முஸ்லிம் பிள்ளைகள் யாராக உருவாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகள் எது எங்கு படிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. 


முஸ்லிம் சமூகத்தில் மகத்தான சிந்தனை மாற்றத்திற்கான துவக்கமாக இந்த உயர்கல்வி மாநாடு அமைந்திருந்தது. 






Tags: கல்வி சமுதாய செய்திகள்

Share this

1 Comments

  1. பெயரில்லா20 மே, 2023 அன்று AM 9:45

    +2 வணிகவியல் முடித்திருக்கும் முஸ்லிம் மாணவியருக்கான மேல்படிப்பு வழிகாட்டுதல் என்ன? அவர்கள் எந்த துறைகளை தேர்வு செய்யலாம்?

    பதிலளிநீக்கு