Breaking News

லால்பேட்டை மக்கள் நலன் சார்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

நிர்வாகி
0



லால்பேட்டையில் நீண்ட நாட்களாக  பாதியில் நிற்கும் சாலை பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டி, லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஃபாத்திமா ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெ.அன்வர் சதாத் மற்றும் செயல் அலுவலர் ஆகியோருக்கு நேரில் மனு அளிக்கப்பட்டது.


நிகழ்வில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது,  செயலாளர் ஏ. முஹம்மது தையூப் முஹிப்பி, பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், நகர கௌரவ ஆலோசகர்கள் வி.ஏ.அப்துல் ரஹ்மான், மௌலவி ஏ.ஏ. முஹம்மது மன்பஈ, நகர துணை செயலாளர் மௌலவி  முஹம்மது அய்யூப் மன்பஈ, மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம். முபாரக், நகர துணைச் செயலாளர் முகமது சித்தீக், பிரமுகர் முஹம்மது ஹாஜா, இளைஞர் அணி செயலாளர் ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.






Tags: லால்பேட்டை

Share this