Breaking News

ஜித்தாவில் நடைபெற்ற அர்ரஹ்மான் ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 ஜித்தா லால்பேட்டை அர்ரஹ்மான் ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி ஷரஃபியாவில் உள்ள ஆர்யாஸ் ரெஸ்டாரண்டில் 29-03-2024 அன்று  (வெள்ளிக்கிழமை) மாலை  மர்ஹீம் J. முஹம்மது சுலைமான் நினைவு அரங்கில்  நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் தலைவர் T.N. ஜியாவுத்தீன் அவர்கள் தலைமைத்தாங்க, ஜித்தா நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.


மொய்னுதீன் பஷாரத் அவர்களின் மகனார் ஜய்து அகமது அவர்கள் இறைவசனம் ஓதி இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


ஜித்தா அர்ரஹ்மான் ஜமாஅத்தின் செயலாளர்  A.நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.


சிறப்புரையாக,

லால்பேட்டையிலிருந்து வருகை தந்த காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅதுல் உலமா தலைவர், மொளவி T.A.அப்துல் ஹாலிக் ஃபாஜில் மன்பஈ அவர்கள், சிறப்பான முறையில் ரமழான், தொழுகை, ஜகாத் மற்றும் இஸ்லாமிய கடமைகளின் சிறப்பை விளக்கினார்.


M.T. முஹம்மது ஆஷிக் அவர்கள் ஜமாஅத்தின் அவசியத்தையும் நமது சமுதாயத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்  பற்றியும் பேசினார்.


பின்பு சிறுவர்களுக்கான குர்ஆன் திலாவத்தில் சிறுவர்கள் ஆர்வமுடன் முன்வந்து, தாங்கள் மனனம் செய்த குர்ஆன் சூராக்களை ஓதி காட்டினர்.


மர்ஹீம் J. முஹம்மது சுலைமான் அவர்களின் நினைவுப்பேச்சு மற்றும் மறுமைக்கான சிறப்பு துஆ கேட்கப்பட்டது.


ஜித்தாவில் வசிக்கும் லால்பேட்டை மற்றும் வெளியூர் சகோதரர்கள் குடும்பத்தினர்களுடன் கலந்துக்கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.


இறுதியாக T.N.ஜியாவுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



 


Tags: லால்பேட்டை

Share this