Breaking News

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மீலாது விழா மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ வெளியீட்டுவிழா.

நிர்வாகி
1

 


அய்மான் சங்கத்தின் சார்பில் மீலாது விழா நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும்  29-10-2022 சனிக்கிழமை அன்று மாலை 7:00 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர்  ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க, மாணவர் லால்பேட்டை நிஸ்வான் அஹ்மத் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ் அவர்கள் வரவேற்பு வழங்கினார்கள் 


இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்து தலைமை உரை வழங்கினார்கள்


 பைத்துல்மால் தலைவர் அதிரை A. ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் அய்மான் முன்னுரை வழங்கினார்கள்.


மௌலானா மௌலவி ஆடுதுறை தலைமை இமாம் E.ஷாகுல் ஹமீது தாவூதி அவர்கள் மீலாது முன்னுரை வழங்கினார்கள்.


துபாய் ஜமாஅத்துல் உலமா தலைவர் பெரம்பலூர் மௌலானா மௌலவி  தாவூத் அலி ஹஸ்ரத் அவர்கள் தஃஸீர் அஷ்ஷஃராவீ முன்னுரை வழங்கினார்கள் 


 #தப்ஸீர் வெளியீடு


அய்மான் சங்கத் தலைவர்கள், துணை தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி & மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ இணைந்து வெளியிட 


 முதல் பிரதியை பணியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் குழுமத்தின் இயக்குனர் ஜனாப் முஹம்மது அலி ஹாஜியார் பெற்றுக்கொண்டார்கள்


இரண்டாவது பிரதியை சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனர் P. A. ஜெகபர் அலி மன்பஈ & அமீராக காங்கிரஸ் தலைவர் A. S. அப்துல் மாலிக் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்


மூன்றாவது பிரதியை தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.


அதனை தொடர்ந்து அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவகுமார் அவர்கள், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் (IIC)  பொருளாளர் ஜனாப் அபூபக்கர் அவர்கள், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.


அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்

லால்பேட்டை தப்ஸீர் அஷ்ஷஃராவீ  மொழி பெயர்ப்பாளர்  மௌலானா மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அய்மான் சங்கத்தின் நினைவு பரிசு வழங்கப்பட்டு அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.


அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் காதர் மீரான் பைஜீ அவர்கள் துபாய் ஜமாஅத்துல் உலமா தலைவர் பெரம்பலூர் மௌலானா மௌலவி  தாவூத் அலி ஹஸ்ரத் அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.


சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி நன்றியுரை வழங்கி ஆடுதுறை தலைமை இமாம் E.ஷாகுல் ஹமீது தாவூதி அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.


நிகழ்ச்சி துஆவுடன் நிறைவு பெற்றது 


 இந்த நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலிது கமிட்டி, முஸ்லீம் கல்வி இயக்கம், அபுதாபி லால்பேட்டை ஜமாத் , மர்ஹபா சமூக நல பேரவை, அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் ,அமீரக காயிதே மில்லத் பேரவை, துபாய் ஈமான், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் காதர் மீரான் பைஜீ அவர்கள், பைத்துல் மால் பொது செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், சங்கத்தின் துணை பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா,நிர்வாக செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாமீம், நிர்வாக செயற்குழு உறுப்பினர் அஜ்மல் தாஹிர், உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.








Tags: உலக செய்திகள் சமுதாய செய்திகள்

Share this

1 Comments

  1. செய்தி நன்றாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாழ்த்துக்கள்!
    - ஜே. மீராமைதீன்

    பதிலளிநீக்கு