Breaking News

லால்பேட்டை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 47 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு விழா , துஆ மஜ்லிஸ்..!

நிர்வாகி
1


லால்பேட்டை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 47 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் 24/01/2023 செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் தாருத் தஃப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது. 


ஜாமிஆவின் முதல்வரும், தமிழ்நாடு அரசின் மாவட்ட காஜியுமான மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், ஜாமிஆவின் பேராசிரியர்களும், உலமா பெருமக்களும் சிறப்புரையாற்றினர்.


சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா எம். முஹம்மது அபூதாஹிர் ஹள்ரத் நிறைவுப் பேருரையாற்றினார்.


தொடர்ந்து திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று, துஆவுடன் விழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் ஜாமிஆவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், ஆலிம் பெருந்தகைகள், பெரியோர்கள், இளைஞர்கள், இளஞ்சிறார்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.




Tags: லால்பேட்டை

Share this

1 Comments