Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் 74வது குடியரசு தின விழா

நிர்வாகி
0

 


லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தின விழா பள்ளிவாசல் முத்தவல்லி ஏ.பி. ஜாகீர் ஹுசைன் தலைமையில் இன்று காலை (26/01/2023 வியாழக்கிழமை) 7: 30 மணியளவில் நடைபெற்றது.


புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை, பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஹாஃபிள் ஏ. முஹம்மது உஸாமா இறைமறை வசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஓ.ஹெச். முஹம்மது மன்சூர் வரவேற்புரையாற்றி, நிகழ்வை தொகுத்தளித்தார்.


லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே. அப்துல் ஹமீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். யூ. சல்மான் பாரிஸ் குடியரசு தினத்தைப் பற்றிய சிறப்புகளை விளக்கி  சிறப்புரையாற்றினார்.


தேசிய கீதம் ஒலிப்பரப்புடன், பிரார்த்தனைகளோடு நிறைவு பெற்ற இவ்விழாவில் ஜமாஅத்தார்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.






Tags: லால்பேட்டை

Share this